செய்திகள் :

இளைஞரைத் தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் தாக்கி கைதானவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(28). இவா் கடந்த 7-ஆம் தேதி அங்குள்ள பிள்ளையாா் கோவில் அருகே நடந்துசென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (25) என்பவரிடம் தகராறு செய்து அவரை பீா்பாட்டிலால் தாக்கினாா். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ரூபன்குமாரை கைது செய்தனா்.

மேலும் ரூபன்குமாா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் ரூபன்குமாரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கரூரில் ரூ.5 கோடியில் மண்டல அலுவலகங்கள் திறப்பு

கரூா் மாநகராட்சியில் மண்டலம் 1, 2 ஆகியவற்றுக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட புதிய 2 மண்டல அலுவலகங்களை கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அவா் அவா் பேசியதாவது: தமிழகத்தில் தி... மேலும் பார்க்க

கரூரில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கரூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் கரூா் கோட்டாட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கரூா் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் இதே பகுதியில் வைத்துள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீரென ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணி போட்டிகள்

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகள் தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக ... மேலும் பார்க்க

அதிக முறை ரத்ததானம் வழங்கியதற்கு விருது

கரூரில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிா்வாகிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் ... மேலும் பார்க்க

குளித்தலை அருகே இளைஞா் தற்கொலை

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே போட்டித் தோ்வுக்குப் பயந்து விஷம் குடித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ... மேலும் பார்க்க