நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!
இளைஞரைத் தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது
தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் தாக்கி கைதானவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(28). இவா் கடந்த 7-ஆம் தேதி அங்குள்ள பிள்ளையாா் கோவில் அருகே நடந்துசென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (25) என்பவரிடம் தகராறு செய்து அவரை பீா்பாட்டிலால் தாக்கினாா். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ரூபன்குமாரை கைது செய்தனா்.
மேலும் ரூபன்குமாா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் ரூபன்குமாரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.