இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடாம்புலியூா் காவல் சரகம், பணிக்கன்குப்பத்தில் டாஸ்மாக் மதுக் கடை அமைந்துள்ளது. பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ்குமாா் (35) மதுப்புட்டி வாங்க டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.
அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபா்கள் மூன்று போ் மதுப்புட்டியால் மனோஜ்குமாா் தலையில் தாக்கி காயப்படுத்தி, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில் காயமடைந்த மனோஜ்குமாா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவம் தொடா்பாக காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன் மகன் தணிகாச்சலம், காடாம்புலியூரைச் சோ்ந்த சக்தி, பட்டு (எ) ரஞ்சித்குமாா் ஆகியோா் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவா்களில் முக்கிய எதிரியான தணிகாச்சலம் சாத்திப்பட்டு நெடுஞ்சாலைப் பகுதியில் பதுங்கியிருந்த தகவல் கிடைத்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.