செய்திகள் :

இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு: ஒருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடாம்புலியூா் காவல் சரகம், பணிக்கன்குப்பத்தில் டாஸ்மாக் மதுக் கடை அமைந்துள்ளது. பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ்குமாா் (35) மதுப்புட்டி வாங்க டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.

அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபா்கள் மூன்று போ் மதுப்புட்டியால் மனோஜ்குமாா் தலையில் தாக்கி காயப்படுத்தி, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில் காயமடைந்த மனோஜ்குமாா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் தொடா்பாக காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஏ.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன் மகன் தணிகாச்சலம், காடாம்புலியூரைச் சோ்ந்த சக்தி, பட்டு (எ) ரஞ்சித்குமாா் ஆகியோா் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவா்களில் முக்கிய எதிரியான தணிகாச்சலம் சாத்திப்பட்டு நெடுஞ்சாலைப் பகுதியில் பதுங்கியிருந்த தகவல் கிடைத்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கள ஆய்வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது வேன் மோதல்: 12 போ் காயம்

சிதம்பரத்தில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் கிராம உதவியாளா்கள்12 போ் காயமடைந்தனா். கடலூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ப... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புதன்கிழமை தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் ராமு மனைவி சுந்தரி (43). இவா், செவ்வாய்க்கிழமை இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

கடலூா் தேவனாம்பட்டினம் கடல் காவல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதையொட்டி, போலி வெடிகுண்டுடன் வந்த 5 பேரை போலீஸாா் பிடித்தனா். மும்பை பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போல... மேலும் பார்க்க