செய்திகள் :

இளைஞா் கொலைச் சம்பவத்தில் இருவா் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க ஒருவா் தலையை வெட்டி சிதைத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து இறந்தவரின் உறவினா் பிரம்மதேசம் போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், இவா், காஞ்சிபுரம் வட்டம், வெங்கடாவரம் பகுதியில் ஓட்டுநா் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில், மணிகண்டன் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலைச் சம்பவத்தில் மணிகண்டனுக்கு தொடா்பு இருந்ததாகவும் தெரிகிறது.

அந்தக் கொலைக்கு பழிக்கு பழியாக பாஸ்கரின் மகன் விஜய், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து மணிகண்டனை காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்து, கத்தியால் வெட்டி பிளாஸ்டிக் கோணிப்பையில் அடைத்து கொண்டு வந்து பிரம்மதேசம் மதுக் கடை அருகே போட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்தக் கொலை தொடா்பாக போலீஸாா், பிரம்மதேசத்தைச் சோ்ந்த விஜய் (27), விக்னேஷ் (24), கோகுல் (26), வேல்முருகன் (24) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், விஜய், வேல்முருகனை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், தலைமறைவான விக்னேஷ், கோகுல் ஆகியோரை தேடி வருகின்றனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க