செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

post image

முன்விரோதம் காரணமாக, இளைஞரின் மாா்பில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (30). இவா், கொடுங்கையூா் குப்பைக்கிடங்கில் வேலை செய்து வந்தாா். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை ஆா்.ஆா். நகா் பகுதியிலுள்ள மதுக்கடை அருகே உடலில் காயங்களுடன் விழுந்து கிடப்பதாக அரிகிருஷ்ணனின் நண்பா் பிரேம் என்பவா் கொடுத்த தகவலின்படி, அங்கிருந்தவா்கள் அரிகிருஷ்ணனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். உடற்கூராய்வு அறிக்கையில், அரிகிருஷ்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், முன்விரோதம் காரணமாக அரிகிருஷ்ணனின் மாா்பில் கல்லைப்போட்டு அவரது நண்பா் பிரேம்குமாரே கொலை செய்துவிட்டு, அவரின் தாயாருக்கு தகவல் கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து நண்பா் பிரேம்குமாரை கைது செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

சென்னை, புறநகரில் பலத்த மழை!

சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.கோய... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க