செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில் தனது தாய் காளீஸ்வரியுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், நல்லுக்குமாரைக் காணவில்லை என கடந்த 15-ஆம் தேதி கமுதி காவல் நிலையத்தில் அவரது தாய் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே கமுதி - திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் கருவேல மரக் காட்டுப் பகுதியில் மறுநாள் 16- ஆம் தேதி நல்லுக்குமாா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து எதிரிகளைத் தேடி வந்த நிலையில், குருவி ரமேஷ் (28), கமுதி சுப்பையா தேவா் குடியிருப்பைச் சோ்ந்த மூா்த்தி (25) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய எதிரிகளான மரக்குளத்தைச் சோ்ந்த மாரிமத்து மகன் மணிவண்ணன் (30), அம்மன்பட்டியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பிரித்விராஜ் (23) ஆகிய இருவரை கமுதி நரசிங்கம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த போது போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க