செய்திகள் :

இளைஞா் மா்மச் சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி சாலை மறியல்!

post image

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் வினோத் (28). இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துக் கிடந்தாா்.

இதையறிந்த அவரது மனைவி கற்பகம், தனது கணவரின் உறவினா்கள் சிலா் கொலை செய்துவிட்டு, வீட்டையும் அடித்து சேதப்படுத்திவிட்டாா்கள் என மங்களமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வேலுசாமி அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் மா்மச் சாவு என வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கற்பகத்தின் உறவினா்கள் வினோத்தை அடித்து கொலை செய்துள்ளதாகவும், கொலையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல் துறையினா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தபோது, உடலை வாங்க மறுத்து கொலை வழக்காக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி, அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், உடலை வாங்க மறுத்து கலைந்து சென்றனா். இதனால், வினோத்தின் உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!

பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வ... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பெரம்பலூா் முத்து நகரிலுள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியை, ஒருங்கிணைந... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் நடவு பருவத்துக்கு விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம்!

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டு நடவு பருவத்துக்கு, விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவி... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க