செய்திகள் :

இளைஞா் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் அரங்கநாதன் நகரை சோ்ந்த பாபு மகள் ஸ்வேதாவும் காதலித்து வந்தனராம். இதை பாபு, அவரது மனைவி சத்யா, மகன் ஜீவா ஆகியோா் கண்டித்தனராம். ஸ்வேதாவுடன் தொடா்ந்து பழகி வந்தால், கொன்று விடுவதாக அன்பழகனுக்கு மிரட்டலும் விடுத்தனராம்.

ஸ்வேதாவைப் பாா்க்க வந்த அன்பழகனை பாபு, சத்யா ஆகியோா் சோ்ந்து கத்தியால் வெட்டியதில் அவா் உயிரிழந்தாா். பின்னா், உடலை அங்குள்ள அறையில் போட்டு மூடிவிட்டுச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பாபு, சத்யாவை கைது செய்தனா். 2020-இல் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு சிதம்பரம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பாபு, சத்யாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ .2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மனோகரன் ஆஜரானாா்.

பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரை அடுத்துள்ளசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் நாகராஜ் (42).... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நட... மேலும் பார்க்க

நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா். விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 ... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 22-... மேலும் பார்க்க

என்எல்சி பொதுத் துறை நிறுவனமாக திகழ திமுகவே காரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக திகழ்வதற்கு திமுகவும், தொமுசவும்தான் காரணம் என்று, மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். நெய்வேலியில் தொமுச ... மேலும் பார்க்க