செய்திகள் :

இளையராஜா பாராட்டு விழா: "பெண்களை அழைக்காதது ஏன்?" - குஷ்பு கேள்வி

post image

பாஜக மையக்குழு கூட்டம் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் சென்னை அக்கறையில் இன்று ( செப்.16) நடைபெற்று வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை ஓட்டி கட்சியில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வுக்கான இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பலர் பங்கேற்று இருக்கின்றனர்.

பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு
குஷ்பு

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் பாஜக மாநில துணைத் தலைவரான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

"எங்களுக்கு அதிமுகவுடன் எந்தப் பிரச்னையும் கிடையாது. கடந்த 5 வருடங்களில் திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் இளையராஜாவின் பாராட்டு விழாவில்கூட முன்வரிசையில், முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பெண்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் பெண்களை நான் பெரிதாகப் பார்க்கவில்லை. இளையராஜாவின் இசையில் எத்தனை பெண்கள் பாடி இருப்பார்கள். ஆனால் இந்த விழாவிற்குப் பெண்களை அவர்கள் கூப்பிடவில்லை.

இளையராஜாவின் பாராட்டு விழா
இளையராஜாவின் பாராட்டு விழா

பெண்களுக்காக நாங்கள் நிறைய விஷயங்களைச் செய்கிறோம் என்று முதலமைச்சர் சொல்கிறார்.

இந்த விழாவிற்கு பெண்களை அழைக்காதது ஏன்? யாரையும் அவர்கள் கூப்பிடவில்லை. அதனை நானும் விசாரித்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து விஜய்யின் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, "கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

தேர்தலில் பார்ப்போம். விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. மக்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கத்தார் மீது தாக்குதல்: ஒன்றுதிரண்ட இஸ்லாமிய நாடுகள்; NATO போன்ற ராணுவ கூட்டமைப்பு உருவாகிறதா?

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - காசா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை, லெபனான், சிரியா, ஈரான், இராக், துனிஷா, ஏமன், கத்தார... மேலும் பார்க்க

Dmk: `தினம் ஒரு அமைச்சர்; 1 லட்சம் சேர், முதல்வருக்காக தனி சாலை... '- முப்பெரும் விழா அப்டேட்

கரூரில் தி.மு.க சார்பில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மூத்த நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் இருந்து வரும்... மேலும் பார்க்க

Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் குறித்து வெளியிடப்பட்ட பொய்-செய்த... மேலும் பார்க்க

ADMK: "அரிதாரம் பூசியவரெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்றனர்; ஆனால்..." - செல்லூர் ராஜூ

"மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.செல்லூர் ராஜூஅறிஞர் அண்ணா பிறந்... மேலும் பார்க்க

"எடப்பாடிதான் முதல்வர் என்றதும் செம்மலை சுவர் எகிறிக் குதித்து ஓடினார்" - கூவத்தூர் குறித்து தினகரன்

சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவ... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க