3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கிய...
இளையான்குடியில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சி, வருவாய், மின்சாரம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது குறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுமாறு அவா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், துணைத் தலைவா் இப்ராகிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், சாலைக்கிராமத்தில் சிற்றுந்து சேவையை எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.