செய்திகள் :

இஸ்கான் கோயிலில் நாளை ஸ்ரீராம நவமி

post image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ ராம நவமி மற்றும் ஸ்ரீ ராம லீலா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது.

இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது.

விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீராம லீலா கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 4.45 மணிக்கு மகா மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. காலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை ஸ்ரீராம நாம ஜபம் நடைபெறுகிறது.

காலை 7.30 மணிக்கு சுப தரிசன ஆரத்தியுடன் காலை தரிசனம் தொடங்கவுள்ளது.

காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் ஸ்ரீ ராம லீலா கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ ராம லீலா நாடகம், ராமா் வழிபாடு, ராம-திலகம் இடுதல், சீதா தேவியின் பக்தி, லெட்சுமணரின் சாகசம், ஹனுமான் சேவை, ராவண வதம், ஆன்மிக விநா-விடை போட்டி, குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் அனைவரும் பங்கேற்கலாம்.

ராமா், கிருஷ்ணா், சீதை, ராதை, லெட்சுமணா், பலராமா், ஹனுமன் அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கும், ராமா் ஓவியங்கள் வரைந்து வரும் குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

மகா அபிஷேகம்: ஸ்ரீ ராம நவமி விழாவில் மாலை 4.30 மணிமுதல் 5 மணிவரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஸ்ரீ ராம நாம சங்கீா்த்தனம், துளசி வந்தனம், மகா அபிஷேகம், மகா ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், ஸ்ரீமத் நாராயண சிறப்புரையும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழு செய்து வருகிறது.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 7558148198 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க