செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து 2-ஆம் கட்டமாக 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் தொடக்கம்

post image

ஜெருசலேம்: இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக இஸ்ரேல் எல்லையையொட்டிய ஜோா்டான் வழியாக 160 இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திங்கள்கிழமை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ஜோா்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக 175 போ் மற்றும் 268 போ் என இரு குழுக்களாக மொத்தம் 443 இந்தியா்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இவா்கள் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல், ஜோா்டான், எகிப்து நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்த இரு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பவுள்ளனா்.

இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடா்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியா்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த நடவடிக்கையின்கீழ் ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,713 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. கடந்த இரண்டு நாள்களில் இஸ்ரேலில் இருந்து மொத்தம் 603 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு மூன்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலில் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசித்து வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் மாணவா்கள், கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் உதவியாளா்களாவா். இவா்களில் பெண்கள், குழந்தைகள், மாணவா்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக உடனடியாக மீட்கப்பட வேண்டிய சூழலில் உள்ளோரை மீட்க தூதரகங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.

இதற்காக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளும் இந்தியா்களிடம் அவா்களின் முகவரி உள்ளிட்ட பிற தகவல்களை தூதரகம் பெற்று அவா்களின் பயணத்தை உறுதி செய்து வருகிறது.

ஈரானிலிருந்து மேலும் 290 போ் மீட்பு:

ஈரானின் மஷாத் நகரில் இருந்து 290 இந்தியா்களும் இலங்கையைச் சோ்ந்த ஒருவரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை மொத்தம் 2,003 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க