செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

post image

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியின் மீது நேற்று (மார்ச் 22) நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவின் மூத்த அரசியல் தலைவரும் பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான சலாஹ் பர்தாவில் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு இன்று (மார்ச் 23) அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹமாஸின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதப்படும் யேமன் நாட்டைச் சேர்ந்த போராளிக்குழுவினர் இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

இதனால், அந்நாடு முழுவதும் அபாய சங்கு ஒலித்த நிலையில் அந்த ஏவுகணையைத் தகர்த்துவிட்டதாகவும் அதனால் எந்தவொரு உயிர் மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என இஸ்ரேல் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து காஸா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை யேமனின் ஹவுதி படையினர் மீண்டும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்... மேலும் பார்க்க

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

ஹைதி நாட்டில் குற்றவாளி கும்பல் தாக்கியதில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூற்ப்படுகின்றது. கரிபியன் கடல் பகுதியிலுள்ள ஹைதி நாட்டில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையின... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர்: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

விழுப்புரம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ள... மேலும் பார்க்க

மார்ச் 28 ஐபிஎல் போட்டி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள்(மார்ச் 28) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்கள், தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் ரயில் கடத்தல்: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயில் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச் 11 அன்று தடைசெய்யப்பட்ட பலூச் லிபரேஷன் ஆர்ம... மேலும் பார்க்க