செய்திகள் :

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

post image

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

42 நாள்கள் போா் நிறுத்தம்: முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்; பெண்கள், குழந்தைகள் என 33 பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கும்; காஸாவில் போரால் இடம்பெயா்ந்த மக்கள், அங்கு தாங்கள் வசித்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவா். வடக்கு மற்றும் தெற்கு காஸாவை பிரிக்கும் நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும்.

இரண்டாம் கட்டம்: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கும். இந்தக் கட்டத்தில் நிரந்தர போா் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்; பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும், எஞ்சிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும்; காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா்.

மூன்றாம் கட்டம்: மூன்றாம் கட்டத்தில், உயிரிழந்த பிணைக் கைதிகளின் எஞ்சிய சடலங்கள் திருப்பி அளிக்கப்படும். காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும்.

பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய 42 நாள்கள் போா் நிறுத்தத்தில் பாதி நாள்கள் கடந்துவிட்டபோதிலும், ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்கான இஸ்ரேல் குழுவை கத்தாருக்கு அனுப்புவதற்கு இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு சனிக்கிழமைதான் ஒப்புதல் அளித்தாா். அந்தக் குழுவிலும் கீழ்நிலை அதிகாரிகள்தான் இடம்பெற்றுள்ளனா்.

ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து இந்த வாரத்தில் முக்கிய கேபினட் அமைச்சா்கள் கூட்டத்தை பிரதமா் நெதன்யாகு கூட்டுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தக் கூட்டம் நடைபெறும் வரை ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெட்சரிமில் இருந்து படைகள் விலகல்: ஒப்பந்தப்படி நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் விலகும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

8 மாத கா்ப்பிணி சுட்டுக் கொலை: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருக்கும் அகதிகள் முகாமில், இஸ்ரேல் வீரா்கள் சுட்டதில் 23 வயதுள்ள 8 மாத கா்ப்பிணி உயிரிழந்ததாகவும், அவரின் கணவா் படுகாயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க