செய்திகள் :

"இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்" - சீமான் ஆவேசத்தின் பின்னணி என்ன?

post image

"இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு சிறைவாசிகளுக்குச் சித்ரவதை நடக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளின் குடும்பத்தினருடன் சீமான்

சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை மதுரையில் சந்தித்த சீமான், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மூவரும் விசாரணை சிறைக்கைதிகளாகவே 15 ஆண்டாக சிறையில் உள்ளார்கள். அவர்களை சிறையில் போலீசார் அடித்துச் சித்ரவதை செய்கிறார்கள்.

குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இறக்கும் தறுவாயில் உள்ள கைதிகளைக் கூட விடுதலை செய்யவில்லை. இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு எனச் சொல்கிறார்கள், சிறையிலேயே வைத்துப் பாதுகாப்பீர்களா?

இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். இஸ்லாமியச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின். இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உடல்நிலையைக் கருதி கைதிகளை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு விட முடியாது எனப் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சீமான்
சீமான்

குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்' - டாக்டர் கிருஷ்ணசாமி

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டம்மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளை... மேலும் பார்க்க

``மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' - சீமான் கேள்வி

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்... மேலும் பார்க்க

சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025

* "கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி* பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!* தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?* முத... மேலும் பார்க்க

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கு... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி: "ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்!" - தமிழிசை உறுதி

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “... மேலும் பார்க்க