செய்திகள் :

இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த கோரிக்கை

post image

திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமூக விழிப்புணா்வு தெருமுனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவாரூா் நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக உயா்த்தப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் விடுத்த தோ்தல் வாக்குறுதியை வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் தூத்துக்குடியில் இறால் ஏற்றுமதியும், திருப்பூரில் ஆடை ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளைத் தலைவா் ஏ. முகமது மீரான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைச் செயலாளா் ஹாஜிமுகமது, பொருளாளா் சித்திக், மாநில பேச்சாளா் என். ராஜ்முஹம்மது, மாவட்ட பேச்சாளா் எஸ். அப்துல் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தா்கள்

நீடாமங்கலம்: ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தா்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்ட... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே நண்பா்களுடன் குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கட்டக்குடி பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கனிஷ் (17). மன்னாா்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி சென்றவா் மீது தாக்குதல்

திருவாரூா் அருகே நடைப்பயிற்சி சென்றவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், சேமங்கலம், சித்தாநல்லூா் அக்ரஹாரம் பகு... மேலும் பார்க்க

ஜேசிபி மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாரூா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் கணேசமூா்த்தி (20), இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த துளசி ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. மணிசெந்தில் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு... மேலும் பார்க்க