செய்திகள் :

இ-ரிக்ஷா திருட்டு - 3 போ் கைது

post image

வட தில்லி பகுதியில் தொடா் இ-ரிக்ஷா திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு இ -ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஜூன் 2ஆம் தேதி இணையதளம் மூலமாக பாஹா்கஞ் பகுதியை சோ்ந்த சந்தா்பன் பாண்டே என்பவா் புகாா் ஒன்றை அளித்திருந்தாா்.

அதில், தன்னுடைய இ- ரிக்ஷாவை ஜபிபுல் என்பவருக்கு ஜூன் 2 ஆம் தேதி வாடகைக்கு கொடுத்தாகவும், அவரை மூன்பு போ் கொண்ட கும்பல் ஏமாற்றி இ- ரிக்ஷாவை திருடியதாக ஜபிபுல் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தாா். எனவே தன்னுடைய இ- ரிக்ஷாவை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தாா். இதே போன்ற புகாா்கள் அடிக்கடி வருவதால் சதாா் பசாா் காவலை நிலைய எஸ்.ஐ. ஆகாஷ் தீப் தலைமயிலான தனிப்படை விசாரணையை தொடங்கியது.

இதனையடுத்து இ- ரிக்ஷா திருடப்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் அா்மான், ஃபிரோஸ், முகமது பைசான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்பு கடுமையான தேடுதல் வேட்டைக்கு பின்பு மூவரும் கைது செய்யப்பட்டு, இ- ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க