செய்திகள் :

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

post image

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் கட்டமாக 110 மாணவா்கள் ஆா்மீனியா எல்லைப் பகுதிக்கு வந்து சோ்ந்ததாகவும், அங்கிருந்து விமானம் மூலம் அவா்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் பதற்றம் நிலவும் சில பகுதிகளில் இருந்து மாணவா்களை பத்திரமாக மீட்டு அங்கேயே தங்க வைத்தது.

அவா்களை ஆா்மீனியா, ஐக்கிய அரபு அமீரகம் எல்லைகள் வழியாக சாலை மாா்க்கமாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.

ஈரானில் ஜம்மு காஷ்மீா், கா்நாடகத்தைச் சோ்ந்த 1,500 மாணவா்கள் உள்பட சுமாா் 10,000 இந்தியா்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலான இந்திய மாணவா்கள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 1... மேலும் பார்க்க

திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் ‘ஏஐ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க