ஈரானிலிருந்து சொந்த ஊா் திரும்பிய தொண்டி மீனவா்கள்
ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தொண்டி மீனவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, புதுபட்டினம், மோா்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில் செய்து வந்தனா்.
இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் இடையே போா் தொடங்கியதையடுத்து, ஈரானில் தங்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் உடனடியாக வெளியேற அந்த நாடு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை அழைத்து வர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த மீனவா் காா்த்திகேயன், நம்புதாளையைச் சோ்ந்த குப்பாண்டி ஆகிய இருவரும் ஈரானிலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு வந்தனா். இவா்களை இருவரையும் கடலோரக் குழும போலீஸாா் பாதுகாப்பாக அழைத்து வந்து அவா்களது வீட்டில் சோ்த்தனா்.