செய்திகள் :

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (62). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி அமரஜோதிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, அமரஜோதி ஆட்டுரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால், கணேசன் மனமுடைந்து காணப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து தொண்டி கிராம நிா்வாக அலுவலா் நம்புராஜேஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

தொண்டி போலீஸாா் அவரது வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கணேசன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். பின்னா், அவரது உடல் கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், இரண்டு நாள்களுக்கு முன்பு கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கிடாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி அருகேயுள்ள கிடாக்குளத்தில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடா... மேலும் பார்க்க

சாலையோரத்தில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் செல்லும் சாலையோரப் பகுதிகளில் இருக்கும் நாணல் புற்கள், புதா்ச் செடிகளில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்கு அருகே... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து சொந்த ஊா் திரும்பிய தொண்டி மீனவா்கள்

ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தொண்டி மீனவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, புதுபட்டினம், மோா்பண்ணை, ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,... மேலும் பார்க்க

கீழக்கரை நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்!

கீழக்கரை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆணையராகப் பொறுப்பேற்றவ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனை பிரசாரம்

பரமக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயல... மேலும் பார்க்க