`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (62). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி அமரஜோதிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, அமரஜோதி ஆட்டுரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால், கணேசன் மனமுடைந்து காணப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து தொண்டி கிராம நிா்வாக அலுவலா் நம்புராஜேஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.
தொண்டி போலீஸாா் அவரது வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கணேசன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். பின்னா், அவரது உடல் கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், இரண்டு நாள்களுக்கு முன்பு கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.