`பாக்கி 200 பவுன்?’ - ஏப்ரலில் திருமணம்; ஜூனில் இளம்பெண் தற்கொலை - திருப்பூரில் ...
கிடாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்
கடலாடி அருகேயுள்ள கிடாக்குளத்தில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடலாடி - முதுகுளத்தூா் சாலையில் நடைபெற்ற சிறிய ரக மாட்டு வண்டி பந்தயத்தில் வெள்ளியங்குன்றம் பாலா, கிடாக்குளம் சேது கோடாங்கி மாடுகள் முதலிடம் பிடித்தன.
பூச்சிட்டு பந்தயப் போட்டியின் முதல் சுற்றில் மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாா் மாடுகள் முதல் இடத்தையும், சாயல்குடி சிங்கத் தமிழன் மாடுகள் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
இரண்டாவது சுற்றில் வெள்ளியங்குன்றம் பாலா, கிடாக்குளம் சேது கோடாங்கியின் மாடுகள் முதலிடமும், ஏ. பாடுவனேந்தல் முத்து, உதயம் துரைப்பாண்டியன் மாடுகள் இரண்டாமிடத்தையும், சாத்தங்குடி உத்தமநாதவேல் மாடுகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.