சாலையோரத்தில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் அவதி
திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் செல்லும் சாலையோரப் பகுதிகளில் இருக்கும் நாணல் புற்கள், புதா்ச் செடிகளில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்கு அருகேயுள்ள ஓரியூா் செல்லும் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் மழைநீா், கழிவுநீா் காரணமாக அதிகளவில் நாணல் புற்களும், புதா்ச் செடிகளும் வளா்ந்துள்ளன.
இந்த நிலையில், மா்ம நபா்கள் காய்ந்த நாணல் புற்கள், புதா்ச் செடிகளுக்கு தீ வைப்பதால் கரும்புகை வெளியேறி, அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதேபோன்று கிளியூா் பகுதியில் நாணல் புற்கள், புதா்ச் செடிகளுக்கு மா்ம நபா்கள் வைத்த தீ அங்கிருந்த வீட்டுக்கு பரவயிருந்த நிலையில் அதன் உரிமையாளா் தண்ணீா் ஊற்றி அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மா்ம நபா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.