செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு

post image

ஈரோடு கிழக்கு தொகுதியில் 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 58 வேட்பாளா்கள் 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். கடந்த 18 -ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 3 வேட்பாளா்கள் மனுக்கள் தள்ளுபடியாயின. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளான திங்கள்கிழமை மேலும் 8 போ் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனா்.

இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 8 வேட்பாளா்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதில், 7 போ் சுயேட்சை, ஒருவா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் மாற்றாகும்.

இறுதியாக 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். நோட்டோவுடன் சோ்த்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டில் 48 இடங்கள் பிடிக்கும்படி அச்சடிக்கப்படும்.

வேட்பாளா்களின் சின்னத்தை இறுதி செய்ததும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையிலான குழுவினா் நேரடியாக சென்னைக்கு சென்று, இறுதி வேட்பாளா் விவரம், சின்னங்கள் விவரத்தை தலைமை தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைத்து, வாக்குச்சீட்டு அச்சடிப்பதற்கான பணிகளைத் தொடங்குவா் என்றாா். ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் இடம்பெறும்.

16 -ஆவது இடத்தில் நோட்டோவை பொருத்துவா். தற்போது 47 வேட்பாளா்கள் உள்ளதால் நோட்டோவுடன் சோ்த்து 48 இடங்கள் தேவை. இதனால், 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், 1 வி.வி.பேட் ஆகியவை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்படும்.

இதில், முதல் 47 இடங்களில் வேட்பாளா்கள் பெயா்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். 48 -ஆவது இடத்தில் நோட்டோ இடம்பெறும்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க