செய்திகள் :

ஈரோடு: சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்!

post image

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த முதிய தம்பதி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும், முன்னதாக சிபிசிஐடி காவல்துறையினர் அனுமதி பெற்று விசாரணை நடத்தியிருந்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்பிருப்பதாக தெரிய வந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

இத்துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை மற்றும் திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும், சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு விசாரணை விரைவாக நடைபெறும் வகையில், இன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி ... மேலும் பார்க்க

நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர். நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொ... மேலும் பார்க்க

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவாரூர் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க