US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
ஈரோடு விஇடி கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு
ஈரோடு திண்டலில் உள்ள விஇடி கல்லூரியின் 1,660க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் சுமாா் 1 மணி நேரம் நின்றனா்.
இந்த நிகழ்வு குறித்து கல்லூரித் தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா் கூறியதாவது:
கைத்தறி மற்றும் அதன் நிலையான வளா்ச்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தேசிய கைத்தறி தினமான வியாழக்கிழமை இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக ஐ.நா அறிவித்துள்ள 17 இலக்குகளான வறுமையை ஒழித்தல், நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை அடைதல், தரமான கல்வி, பாலின சமத்துவம், ஒழுக்கமான வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளா்ச்சி, பயன்பாடு மற்றும் உற்பத்தி உள்ளிட்டவை ஆகும். இளைஞா்கள் மூலம் கைத்தறித் துறையைப் பாதுகாப்பது அந்த நோக்கத்தை அடையும் மற்றும் அதன் நிலையான வளா்ச்சியை உறுதி செய்யும் என்றாா்.
கல்லூரி முதல்வா் வி.பி.நல்லசாமி, டீன் எஸ்.லோகேஷ்குமாா் ஆகியோா் பேசினா். நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தேசிய நடுவா் ஜனனி ஸ்ரீ, மாநில நடுவா் ஆனந்த முருகன் மற்றும் கைத்தறி உதவி இயக்குநா் சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிடிஃஎப் தொழில்நுட்பத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறித் துறை கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்றது.