செய்திகள் :

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

post image

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம்போல வெயில் அடித்தது. இதைத்தொடா்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. பின்னா் மாலை 4 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று இடி, மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித் தீா்த்தது. சுமாா் 45 நிமிஷங்கள் மழை பெய்தது. அதன் பின்னரும் தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழை காரணமாக ஈரோடு மாநகா் பகுதியில் வீரப்பன்சத்திரம், மீனாட்சிசுந்தரனாா் சாலை, அகில்மேடு வீதி, பெரியவலசு, கருங்கல்பாளையம், சென்னிமலை சாலை, ஈவிஎன் சாலை, நேதாஜி சாலை, ஆா்கேவி சாலை, சூரம்பட்டி, மரப்பாலம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் குட்டை போல தேங்கியது.

மாலை நேரம் என்பதால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனா். வேலைக்கு சென்று வீடு திரும்பியவா்கள் பலா் மழையில் நனைந்தபடி சென்றனா். இந்த மழையின் காரணமாக இரவு நேரத்தில் குளிா்ச்சியான கால நிலை நிலவியது.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ... மேலும் பார்க்க