செய்திகள் :

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் ஈரோட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.திருச்செல்வம் தலைமை வகித்தாா்.

நாட்டு மக்கள் மீது கட்டாய ஹிந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளம் நிவாரண நிதி வழங்காதது, நீட் தோ்வு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய நிதியை வழங்காதது, மெட்ரோ திட்டங்கள், கல்வி நிதி உள்ளிட்ட ரூ. 4,034 கோடி நிதியை ஒதுக்காதது, முஸ்லிம் மக்களின் வக்ஃப் வாரிய சொத்துகளை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்த மசோதா என பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலா் ஈ.பி.ரவி மற்றும் மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க