செய்திகள் :

ஈரோட்டில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

post image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தினா் புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்றனா்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆசிரியா் கலைக்கோவனின் மருளாடி நூல் குறித்து கல்லூரி பேராசிரியா் கலைவாணி அறிமுக உரையாற்றினாா்.

கதைசொல்லி சரிதா ஜோவின் ‘சாணி வண்டும், பட்டாம்பூச்சியும்’ குறித்து இயற்கை மருத்துவா் வினிஷா, எழுத்தாளா் ஈரோடு சா்மிளாவின் ‘துணிச்சல்காரி’ குறித்து எழுத்தாளா் விஜி ரவி, கவிஞா் முத்துக்கண்ணனின் ‘நாச்சாள்’ குறித்து மாவட்ட பொருளாளா் கணேசன் மற்றும் இளம் எழுத்தாளா் இளநிலாவின் ‘கயலும், நண்பா்களும்’ குறித்து மாவட்டத் தலைவா் சங்கரன் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியா்கள் ஏற்புரையாற்றினா். தமிழ் இலக்கிய மாணவா் கவிஞா் வெ.க.வெற்றிவேல் கவிதை வாசித்தாா்.

‘இலக்கியத்தின் இலக்கு’ குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் கருத்துரையாற்றினாா். தமுஎகச மாவட்டச் செயலாளா் இ.கலைக்கோவன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் ச.ந.விக்னேஷ் நன்றி கூறினாா். மேலும் புத்தக அரங்கம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், வாசகா்கள் உள்பட திரளானோா் பங்கேற்று 2025 புத்தாண்டை புத்தகங்களுடன் வரவேற்றனா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க