செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

post image

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை என்றும் 4 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 25) மேற்கொண்டார்.

தொண்டர்கள் மத்தியில் திமுக அரசை விமர்சித்து அவர் பேசியதாவது,

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், 24 மணி நேர மும்முனை மின்சாரம் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லேப்டாப் வழங்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.

திமுக ஆட்சியில் கடந்த 51 மாதங்களில் மணப்பாறை மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முழு பாதுகாப்பும், சலுகைகளும் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு நீர் முக்கியம் என்பதை உணர்ந்து குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். இத்திட்டத்தால், ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

மின்வெட்டால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்தும் வகையில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

MK Stalin project with you is a fraud EPS

தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக திருச்சி மாவட்ட செயலாளர் டிவ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன... மேலும் பார்க்க

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

தவெக மாநாட்டில் விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று(ஆக.27) காலை வினாடிக்கு 6871 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிர... மேலும் பார்க்க