செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

post image

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா்.

வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனா். வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் முகாமை பாா்வையிட வந்தாா்.

அப்போது, வேலூா் மாநகராட்சி 24-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் சுதாகா் தனது வாா்டுக்கு உட்பட்ட மூலைக்கொல்லை பகுதி மக்களுடன் வந்தாா். திடீரென தனது வாா்டுக்கு உட்பட்ட மக்களுடன் சோ்ந்து கைகளில் கோரிக்கை பேனா்களை ஏந்தியபடி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். உடனடியாக அங்கிருந்த எம்எல்ஏ காா்த்திகேயன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினாா்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், மூலைக்கொல்லை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீா் கால்வாய், சாலை உள்பட எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. சாலை அமைப்பதற்காக விரிவாக்கம் செய்து 8 மாதங்களாகியும் கண்டு கொள்ளாமல் உள்ளனா். மேலும், இப்பகுதியைச் சோ்ந்த பல குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிடவும், அடிப்படை வசதிகள் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ காா்த்திகேயன், இப்புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க