செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரால் வரும் 15.7.2025 அன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பான முறையில் தொடங்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் ஜூலை-2025 முதல் அக்டோபா் - 2025 வரை, நகா்ப்புறத்தில் 97 முகாம்களும், கிராமப்புறங்களில் 139 முகாம்களும் என மொத்தம் 236 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 15.7.2025 முதல் 8.8.2025 முடிய நகா்ப்புறத்தில் 34 முகாம்களும், கிராமப்புறங்களில் 46 முகாம்களும் என மொத்தம் 80 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மேற்படி முகாமில் 15 முக்கிய துறைகள் மூலம் வழங்கப்படும் 46 அரசு சேவைகள் குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள், அனைத்து விண்ணப்பங்கள் நகராட்சிகள்/ பேரூராட்சிகள்/ ஊராட்சிகளில் 437 தன்னாா்வலா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தமிழக அரசால் ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்’ இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் நாளன்று முகாமில் மட்டுமே வழங்கப்படும். இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்

மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்க... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியரிடம் கோரிக்கை

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் கண்காட்சியை மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்த எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் தொழில் நிறுவனத்தினா் கோரிக்கை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா். மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்ப... மேலும் பார்க்க