Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஊத்துக்குளியில் ஆட்சியா் களஆய்வு
ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான அலுவலா்கள் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மொரட்டுபாளையத்தில் உள்ள குழந்தைகள் ஆய்வு மையம், கவுண்டம்பாளையம் ஊராட்சி புதுகாலனியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, அணைப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கதொட்டி கட்டும் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
அதேபோல, ஊத்துக்குளி வட்டத்துக்கு உள்பட்ட இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட அளவிலான அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திட்டஇயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், தனித் துணைஆட்சியா் (சமூகப் பாதுகப்புத் திட்டம்) பக்தவச்சலம், பொதுமேலாளா் (ஆவின்)சுஜாதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, உதவிஆணையா் (கலால்) செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.