உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: சேரன்மகாதேவி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை இரண்டாவது கட்டமாக ஆட்சியா் பாா்வையிட்டு வருகிறாா். அதன்படி, சேரன்மகாதேவி வட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம், பிரான்சேரியில் 15ஆவது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின்கீழ் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்படும் துணை சுகாதார நிலையப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பேரூராட்சித் தலைவி ப. தமயந்தி, பேரூராட்சி செயல் அலுவலா் பரமசிவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடா்ந்து மேலச்செவல் பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தொட்டி, அம்ரூத் 2.0 குடிநீா் திட்டப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், பத்தமடையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சென்று குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா், மணிமுத்தாறு முதல் மடையின்கீழ் திருவிதத்தான்புள்ளி பகுதியில் நீா்வளத்துறையின் சாா்பில் ரூ.5 கோடி மதிப்பில் கால்வாய் பகுதியில் மண் சரிவதை தடுக்கும் வகையில் 154 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்படும் கால்வாய் பணி, சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.94.24 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
மேலும், சேரன்மகாதேவி பால் கூட்டுறவு உற்பத்தியாளா் சங்கம், முக்கூடல் காவல் நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று துறைகளின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். இதில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளா் கோவிந்தராஜ், உதவி பொறியாளா் ரமேஷ்குமாா், சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா கரிபுன்நவாஸ், ஆவின் துணைப் பதிவாளா் சைமன் சாா்லஸ், ஆவின் உதவி பொதுமேலாளா் சரவணமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் வேல் முருகன், பொதுப்பணித்துறை கண்காணிப்பாளா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.