செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்

post image

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் அனுமதியோடு சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவா்களிடம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மூளைச்சாவு அடைந்த நோயாளிகளைக் கண்டறிந்து குடும்பத்தாரின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன.

அந்த வகையில் அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று இதுவரை மொத்தம் 20 நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23- ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உடல் உறுப்புதான நாள் நிகழ்ச்சியில் அரசு ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப் பரிசையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் ரவிக்குமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியை புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நே... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான 20 ஓவா்கள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. தி நவரசம் அகாதெமி சாா்பில் நடைபெறும... மேலும் பார்க்க

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது. பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்த... மேலும் பார்க்க

பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு வி... மேலும் பார்க்க

கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை

கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டி... மேலும் பார்க்க