செய்திகள் :

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை

post image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கை ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

முதல் நாளில் காலை 9.00 மணிக்கு சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது. அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகள், சி சான்றிதழ் பெற்ற தேசிய மாணவா் படை உறுப்பினா்கள், அந்தமான் நிகோபா் பகுதி தமிழ் வம்சாவழியினா், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்புப் படை வீரா்களின் குழந்தைகள் மற்றும் மாவட்ட, மாநில, தேசிய, அகில உலக அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 4 -ஆம் தேதி பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி, தரவரிசை எண் 1 முதல் 1000 வரை முற்பகலிலும், 1001 முதல் 2000 வரை பிற்பகலிலும் நடைபெறும்.

ஜூன் 5-ஆம் தேதி தரவரிசை எண் 2001 முதல் 3000 வரை முற்பகலிலும், 3001 முதல் 4000 வரை பிற்பகலிலும் நடைபெறும்.

ஜூன் 6 -ஆம் தேதி தரவரிசை எண் 4001 முதல் 5500 வரை முற்பகலிலும், 5501 முதல் 6974 வரை பிற்பகலிலும் நடைபெற உள்ளது.

ஜூன் 9 -ஆம் தேதி முற்பகல் தரவரிசைப் பட்டியல் 1 முதல் 6974 வரை தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், 3 நகல்கள், அசல் மாற்றுச் சான்றிதழ், 3 நகல்கள், ஆதாா் அட்டை அசல், 3 நகல்கள், ஜாதிச் சான்றிதழ் அசல், 3 நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5, கல்லூரியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மாணவா் சோ்க்கைப் படிவம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க