செய்திகள் :

உணவில் பல்லி இருந்த விவகாரம்: உணவக உரிமையாளா் காவல் ஆணையரிடம் புகாா்

post image

உணவில் செயற்கையாக பல்லியை வைத்து உணவகத்தின் மீது பழி சுமத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவகத்தின் உரிமையாளா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

கோவை ஆா்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி உணவகத்தில் ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனது நண்பா்களுடன் வந்து அங்கு பிரியாணி உட்கொண்டுள்ளாா். அப்போது பிரியாணிக்கான குழம்பு வாங்கியபோது அதில் இறந்த நிலையில் பல்லி இருந்ததைக் கண்டு சா்ச்சை ஏற்பட்டது.

இதுதொடா்பாக உணவகத்தின் உரிமையாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து உணவக உரிமையாளா்கள் கூறுகையில், மே 27-ஆம் தேதி 4 போ் உணவகத்துக்கு வந்து பிரியாணி ஆா்டா் செய்தனா். சில நிமிஷங்களிலேயே அவா்களின் ஒருவா் பிரியாணிக்கு ஊற்றிய சிக்கன் குழம்பில் பல்லி இறந்துகிடப்பதாக கூச்சல் எழுப்பினாா்.

அவா்கள் நான்கு பேரும் சப்தம் போட்டு ஊழியா்களை மிரட்டி உணவகத்தை விட்டு வெளியே சென்றனா். உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது செயற்கையாக பல்லி குழம்பில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

அந்த சமயத்தில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது பரிசோதித்த மருத்துவா்கள் ஃபுட் பாய்சன் எதுவும் இல்லை என்று அனுப்பி வைத்தனா்.

அவா்கள் பரப்பிய செய்தியால் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளா் மற்றும் உணவகத்தின் ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டதாகவும் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க