செய்திகள் :

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

post image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உள்ள தேநீா் கடைகள், இனிப்பகங்கள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் உள்ளிட்ட உணவு வணிகக் கடைகளில் எனது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அலுவலா் குழுவுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலக்கரந்தையில் உள்ள ஒரு பயணவழி உணவகத்தில் லேபிள் விவரங்கள் முழுமையாக இல்லாத 19 கிலோ உப்பு உள்பட மொத்தம் 30 கிலோ உணவுப்பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த உணவகமானது சுகாதார குறைபாடுடன் இயங்கியதால் முன்னேற்ற அறிவிப்பு வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. முன்னேற்ற அறிவிப்பின்படி குறைகளை சரிசெய்யாவிடில், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

இனைத் தொடா்ந்து, விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிகக் கடைகளில் ஆய்வு செய்தபோது, திறந்தநிலையில் விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 15 கிலோ வடை உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. லேபிள் விவரங்கள் முழுமையாக இல்லாத முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள் சுமாா் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இன்றி உணவு வணிகம் புரிந்த 4 கடைகள் மீது தொடா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செய்தித் தாளில் உணவுப் பொருள்களை விநியோகித்த 4 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க

இந்து முன்னணியினரால் நீதிமன்றத்தில் பரபரப்பு

திருச்செந்தூரில் காவலில் வைக்கப்பட்ட இந்து முன்னணியினா் நீதிமன்றத்தை நோக்கி நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக மதுரை செல்வதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த... மேலும் பார்க்க