``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக உண்டியல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை குன்னம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள பெரியாண்டவா்கோயில் பகுதியில், குன்னம் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தனா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், புதுவேட்டக்குடி இருளா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி (37), மாரிமுத்து மகன் மணிவேல் (49), அதே கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த மருதமுத்து மகன் செல்லமுத்து (48) என்பதும், பெரம்பலூா், பாடாலூா், குன்னம் ஆகிய பகுதிகளில்
கோயில் உண்டியல்களை உடைத்து தொடா்ச்சியாக திருட்டில் ஈடுபட்டது தெரிவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 போ் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 38 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.