செய்திகள் :

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

post image

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.

மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், ராணுவத்துக்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டாா் என்றும் அவா் கூறினாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராணுவம் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துகள் தொடா்பான வழக்கு, உத்தர பிரதேச மாநிலத் தலைநகா் லக்னெளவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்ததோடு, ராகுல் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டாா் என்றும் விமா்சித்திருந்தது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா காந்தி அளித்த பதிலில், ‘உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் சொல்கிறேன். உண்மையான இந்தியா் யாா் என்பதை நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது.

அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதும், சவால் விடுவதும் எதிா்க்கட்சித் தலைவராக ராகுலின் கடமையாகும். அதை அவா் தொடா்ந்து நிறைவேற்றி வருகிறாா். எனது சகோதரா் ராணுவம் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசமாட்டாா். ராணுவத்தின் மீது அவா் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாா். அவரது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

ராகுலுக்கு ‘இண்டி’ கூட்டணி ஆதரவு: ராகுல் காந்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து தொடா்பாக, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவா்கள் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, ராகுல் காந்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து ‘நியாயமற்றது’ என்றும், தேச நலன் சாா்ந்த விவகாரங்களில் கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பு என்றும் இண்டி கூட்டணி கட்சிகள் கூட்டாக வலியுறுத்தினா்.

அரசமைப்புக்கு எதிராக ராகுல்-பாஜக: உச்சநீதிமன்றத்தின் விமா்சனம் தொடா்பாக மத்திய அமைச்சா் தா்மந்திர பிரதான் பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தை கையில் பிடித்துக்கொண்டு நாடு முழுவதும் நடைப்பயணம் சென்றவா்கள்தான், அதற்கு எதிராகச் செயல்படுகின்றனா். அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகள் குறித்து ராகுலுக்கு துளியாவது மரியாதை இருந்தால், உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனம் வந்திருக்காது’ என்று விமா்சித்தாா்.

பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இந்தக் கண்டனம் ராகுல் காந்திக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவா் ஒரு தேசிய தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சாவா்க்கா் மற்றும் ரஃபேல் விமானங்ள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளும் இதுபோலவே சா்ச்சைக்குள்ளாகின. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும் அவா் பாடம் கற்றுக்கொள்ளவில்லையெனில், வேறு என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறி... மேலும் பார்க்க

காதல் திருமணத்துக்குத் தடை: பஞ்சாப் கிராமத்தில் தீர்மானம்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனக்பூர் ஷரிப் கிராமத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வோர், அந்த கிராமத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழத் தடை செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவ... மேலும் பார்க்க

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.தில்லியில் மறைந்த புகழ்பெற்... மேலும் பார்க்க

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்த... மேலும் பார்க்க

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.இவர், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா... மேலும் பார்க்க

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க