TN ASSEMBLY: EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI| Imper...
உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு
உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இவா், இந்தப் பகுதியில் புறவழிச்சாலையிலுள்ள தனியாா் உணவகத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா், திங்கள்கிழமை அதிகாலையில் உணவகத்துக்கு பின்னால் சுவரில் சாய்த்து வைத்திருந்த இரும்புக் கம்பியை தூக்கி வேறு இடத்துக்கு மாற்ற முயன்றாா். அப்போது, அருகிலிருந்து மின்சாரப் பெட்டியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.