செய்திகள் :

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

post image

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் கங்கையில் உண்டான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், உத்தரகாசி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவினர், மேகவெடிப்புக்கு பின் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதில், 20 பேர் மகாராஷ்டிரத்தில் குடியேறியவர்கள் எனவும், மீதமுள்ள 8 பேர் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மாயமான சுற்றுலாப் பணிகளின் உறவினர் ஒருவர் கூறுகையில், இறுதியாக அவர்கள் அனைவரும் நேற்று (ஆக.5) காலை 8.30 மணியளவில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியதாகவும், அதையடுத்து, அவர்களது பயண வழியில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்பு, அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த ஹரித்வாரைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்துக்கு அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆக.5 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட மேகவெடிப்பினால் உண்டான இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்

A tourist group of 28 people from Kerala have reportedly gone missing in a cloudburst disaster in Uttarakhand.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறி... மேலும் பார்க்க

காதல் திருமணத்துக்குத் தடை: பஞ்சாப் கிராமத்தில் தீர்மானம்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனக்பூர் ஷரிப் கிராமத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வோர், அந்த கிராமத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழத் தடை செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவ... மேலும் பார்க்க

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.தில்லியில் மறைந்த புகழ்பெற்... மேலும் பார்க்க

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்த... மேலும் பார்க்க

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்த இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான கபில் ராஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.இவர், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா... மேலும் பார்க்க

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க