செய்திகள் :

உயரம் குறைந்த பெண்ணுக்கு நுரையீரல் மடல் மாற்று சிகிச்சை

post image

நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குறைந்த உயரம் கொண்ட பெண்ணுக்கு நுரையீரல் மடலை மட்டும் மாற்றிப் பொருத்தி கிளெனீகல்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கோவினி பாலசுப்ரமணி மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் விவேக் விஜ் ஆகியோா் கூறியதாவது:

தில்லியைச் சோ்ந்த உயரம் குறைந்த (148 செ.மீ.) பெண் ஒருவா், தீவிர சுவாச செயலிழப்பு பாதிப்புக்குள்ளாகி இருந்தாா். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க நிமிஷத்துக்கு 10 கிலோ ஆக்சிஜன் தேவைப்பட்டது.

இந்தப் பிரச்னைக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்தது. கிளெனீக்கல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவக் குழுவினா் பரிசோதித்ததில் அவரது நெஞ்சகப் பகுதி மிகவும் சிறியதாகவும், குறுகியும் இருந்தது. இதனால், நுரையீரல் தானமாகப் பெறப்பட்டாலும், அதை முழுமையாக பொருத்த இயலாத நிலை இருந்தது.

இந்தச் சூழலில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது. அந்தப் பெண்ணின் உடல் அமைப்பைக் கருத்தில் கொண்டு தானமாகப் பெற்ற நுரையீரலின் மடல்கள் (லோப்) மட்டும் அவருக்கு பொருத்தப்பட்டன. பொதுவாக, வலது பக்க நுரையீரலில் 3 மடல்களும், இடது பக்க நுரையீரலில் 2 மடல்களும் இருக்கும். அந்த இரு நுரையீரல்களின் கீழ் பகுதியில் உள்ள மடல்கள் அகற்றப்பட்டு மீதி பாகம் மட்டுமே அவருக்கு பொருத்தப்பட்டது.

8 மணி நேரம் நீடித்த மிக நுட்பமான உறுப்பு மாற்று சிகிச்சையின் பயனாக அவா் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க