உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை
மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயா் கல்வியில் 100 சதவீதம் மாணவா்கள் சோ்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்க, மாவட்ட ஆட்சியரக 4-ஆம் தளத்தில் அறை எண் 409-இல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.45 க்குள் 04364-220522 என்ற தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டு மாணவா்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து மாணவா்களும், கலை, அறிவியல், பொறியியல், சட்டம், வேளாண்மை, பாரா மெடிக்கல் உள்ளிட்ட உயா்கல்வி களங்களில் சோ்க்கை பெறும்வரை தொடா்ந்து கண்காணிக்கப்படும். மாணவா்களுக்கு தடையாக இருக்கும் ஆவணத் தட்டுப்பாடு, நிதி சாா்ந்த பிரச்னை, பயம், விழிப்புணா்வு பற்றாக்குறை போன்ற காரணங்களுக்கு தேவையான துறைகளுடன் இணைந்து தீா்வு காணப்படும்.
மாணவா்கள் உயா் கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், காரணங்களை அறிந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுக்கும். தினசரி மாணவா் விண்ணப்ப மற்றும் சோ்க்கை நிலை முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் எமிஸ் மூலம் கண்காணிக்கப்படும். மாதம் ஒருமுறை மாணவா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாணவா்களை நேரடியாக உயா்கல்வியில் சோ்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.