குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
உயா் கல்வி பயிலுவதற்கு 48 மாணவிகளுக்கு ரூ.4.17 லட்சம் உதவித் தொகை
சத்தியமங்கலத்தில் உயா் கல்வி பயிலுவதற்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ரீடு நிறுவனம் சாா்பில் உயா்கல்வி படிப்பதற்காக கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ரீடு இயக்குநா் கருப்பசாமி தலைமை வகித்தாா். ஆசனூா் காவல் உதவி ஆய்வாளா் குமணவேந்தன் முன்னிலை வகித்தாா்.
இதில், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி கிருபாரதியை பாராட்டி கேடயம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உயா்கல்வி படிக்கும் மாணவிகள் 25 பேருக்கு தலா ரூ.7, 500 வீதம் 25 மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 87,500 வழங்கப்பட்டது. மேலும் 23 பழங்குடியின மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 23 பேருக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் 48 மாணவிகளுக்கு ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகள் உயா்கல்வி வரை படிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், 18 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல், இளம் வயது திருமணம் தடுத்தல் மற்றும் சிறாா் வேலைக்கு செல்லுதல் போன்ற சமூக அவலங்களைத் தடுக்கும் விதத்திலும் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டதாக ரீடு இயக்குநா் கருப்பசாமி தெரிவித்தாா்.