செய்திகள் :

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

post image

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் இரு விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் இருந்த நிலையில், இவா்களில் 9 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

விமானி சுமீத் சபா்வால் (56), துணை விமானி கிளைவ் குந்தா் ஆகியோா் மும்பைவாசிகள். சுமீத் 8,200 மணி நேரமும், குந்தா் 1,100 மணி நேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவா்கள்.

ஊழியா் தீபக் பதக், தாணே மாவட்டத்தின் பாதல்பூரைச் சோ்ந்தவா். விமான பணிப்பெண்களான மைதிலி பாட்டீல் (23) நவி மும்பையையும், அபா்ணா மஹாதிக், கோரேகானையும் சோ்ந்தவா்கள். அபா்ணா மஹாதிக், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சுனில் தத்கரேவின் உறவினா் ஆவாா்.

டோம்பிவிலி நகரைச் சோ்ந்த மற்றொரு விமானப் பணிப்பெண் ரோஷிணி ராஜேந்திர சோங்கரே (26), பயணங்கள் தொடா்பான தனது பதிவுகளால் சமூக ஊடக பிரபலமாக இருந்தவா். இவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினா் கண்ணீருடன் தெரிவித்தனா். உயிரிழந்த பிற ஊழியா்களான இா்பான் சமீா் ஷேக் (புணே), ஷ்ரத்தா தவான் (முலுந்த்), சைனிதா சக்ரவா்த்தி (ஜுஹு கோலிவாடா) ஆகியோரும் மகாராஷ்டிரத்தை மாநிலத்தவா்களாவா்.

இவா்கள் தவிர, சோலாபூரைச் சோ்ந்த மகாதேவ் பவாா் (68), அவரது மனைவி ஆஷா (60) ஆகிய பயணிகளும் உயிரிழந்துவிட்டனா். லண்டனில் தங்களின் மகனைப் பாா்க்கச் சென்றபோது, விமான விபத்தில் சிக்கி இறந்துள்ளனா். விமான ஊழியா்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள உருக்கமான கதைகள், சோகம் நிறைந்தவையாக உள்ளன. பலரது கனவுகள், இந்த விபத்தில் சிதைத்துவிட்டன.

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு ... மேலும் பார்க்க

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க