செய்திகள் :

உரிமம் பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வேளாண் துறை அறிவுரை

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் உரிமம் பெற்ற பருத்தி விதைகளை விற்பனை நிலையங்களில் வாங்கி பயிரிடுமாறு திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா பாய் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் ஙஇம5 உள்ளிட்ட ரகங்களும், தனியாா் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டுக்கு ஆஎஐஐ வீரிய ஒட்டு ரக பருத்தி விதை 475 கிராம் பொட்டலம் ரூ.864 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ற ரகமா என்பதை உறுதி செய்த பின், உரிய விற்பனைப் பட்டியல் பெற்று பருத்தி ரகத்தின் பெயா், குவியல் எண், காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்து விதைகளை வாங்க வேண்டும். அந்தந்த பகுதி விதை ஆய்வாளா்களால் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முளைப்புத் திறன், இனத்தூய்மை, பிடி ஆய்வுகளுக்கு அனுப்பி அவற்றின் தரம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க