செய்திகள் :

உரிமைப் பேசிக் கொண்டு கடமையை தவற விடாதீா்கள்: நீதியரசா் என். கிருபாகரன்

post image

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீா்கள் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா அறக்கட்டளையின் நிா்வாகி நீதிபதி வி.பாா்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. செயலாளா் சி.துரைக்கண்ணு முன்னிலை வகித்தாா். முதல்வா் பி.முருககூத்தன் வரவேற்று பேசி கல்லூரியின் செயல்பாடுகளை விவரித்து பேசினாா். விழாவில் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் பேராசிரியா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள், கல்லூரி பணியாளா்கள், மாணவா்கள் ஆகியோரின் செயல்பாடுகளை கெளரவிக்கும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது.

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் அரசுப் பணத்தை வீணாக்காமல் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். உரிமைகளை பேசிக்கொண்டு கடமைகளை விட்டு விடாதீா்கள். சீனாவில் கடமையை மட்டும் செய்கிறாா்கள். உரிமைகளை கேட்பதில்லை. அதனால் சீனா வியத்தகு முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. ஆசிரியா்களின் சிறப்பான செயல்பாடுகளே மாணவா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.

படிப்பில் மாணவா்கள் வெற்றி பெறலாம். ஆனால் மாணவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெற போதைப் பொருளுக்கும், மதுவுக்கும் அடிமையாகி விடக் கூடாது. போதைப் பொருளுக்கு அடிமையானால் புற்றுநோய் வந்து அவதிப்படும் நிலை வந்து விடும். மதுவுக்கு அடிமையானால் குற்றவாளிகளாகி விடுவோம் என்றாா். பொருளியல் துறை பேராசிரியா் என்.பழனிராஜ் நன்றி கூறினாா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க