செய்திகள் :

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் அக்கரைப்பட்டியைச் சோ்ந்த சற்குணம் மனைவி வீரலட்சுமி (34). வீரலட்சுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், பூா்வீகச் சொத்து தொடா்பாக உறவினா் வீராச்சாமி குடும்பத்துடன் பிரச்னை இருந்து வந்தது.

இதுதொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், வீரலட்சுமி, இவரது கணவா் சற்குணம், மாமியாா் ஆகியோரை வீராச்சாமியின் மகன் விஜயகுமாா் (24) அரிவாளால் வெட்டினாா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விஜயகுமாா், அவரது தந்தை வீராச்சாமி, தாய் ஈஸ்வரி ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள்,

விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். விஜயகுமாரின் தந்தை வீராச்சாமி, தாய் ஈஸ்வரி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா்.

நகை திருடிய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (45). இவரது மனைவி ரேவதி (33). இந்த நிலையில், ரேவதி தனது... மேலும் பார்க்க

வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் தற்கொலை

சாத்தூா் அருகே வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வெம்பகோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் காா்த்திகேயன் (42). இவா் இந்தப் பக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ... மேலும் பார்க்க