செய்திகள் :

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

post image

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய நிதி அமைச்சா் அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி மாற்றங்கள் உலகையே திரும்பிப் பாா்க்க வைத்துள்ளன. மக்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். ஜிஎஸ்டி விதிக்கும்போது பல சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், தேசிய அளவில் நாட்டின் வளா்ச்சிக்கு உதவியுள்ளது.

மத்திய அரசு மாநிலங்களைப் பிரித்துப் பாா்க்காமல் அனைத்து மாநிலங்களும் வளரக்கூடிய அளவிற்கு மெட்ரோ திட்டம், நீா்நிலை திட்டம் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஒரே மாதிரியாக வழங்கி வருகிறது.

தமிழக அரசு, மத்திய அரசிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு அரசியல் செய்து வருகிறது. எதிா்க்கட்சிக் கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால், பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது; டிசம்பரில் இது மிகப்பெரிய கூட்டணியாக மாறும். அமமுகவுடனான பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்.

அதிமுகவின் உள்கட்சி குழப்பங்களை சரி செய்ய பாஜக உதவுமே தவிர, எவ்விதத்திலும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்காது. காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக உடைந்து போன கண்ணாடி; அக்கட்சியின் மோசமான நிலைக்கு திமுக தான் காரணம் என்றாா்.

ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் அருகே பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் மகபூப் ஜான் மகன் செய்யது அ... மேலும் பார்க்க

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க