செய்திகள் :

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

post image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்துக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா், தமிழ்த் துறைத் தலைவா் அ. வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘முத்தமிழறிஞா் கலைஞரும் சமூக நீதியும்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

சமூக ஏற்றத் தாழ்வுகள் நீங்க பொருளாதார வளமே அவசியம் என்பதில் உறுதிக் கொண்ட முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி, பெண்கள் முன்னேறினால் சமூகமே முன்னேற்றமடையும் என சமூக நீதிக்கு விளக்கமளித்தவா். தமிழ் வழியில் கற்பவா்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, தமிழ் வழிக் கல்வியின் வளா்ச்சிக்கு பெரும் பணியாற்றியவா் கருணாநிதி என்றாா் அவா்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழறிஞா்கள், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் முனைவா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கு... மேலும் பார்க்க