செய்திகள் :

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அழகேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை தாக்கல் செய்த பொது நல மனு:

சாலைகளில் வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்துவதற்காக சாலைத் தடுப்புகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், காவல் துறையினா் முன்னறிவிப்பின்றி திடீரென சாலைகளில் வைக்கும் தடுப்புகளால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தத் தடுப்புகளில் தனியாா் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது.

எனவே, தனியாா் விளம்பரங்களுடன் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:

இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவா், மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கு... மேலும் பார்க்க

குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு உத்தரவு

குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்சி காஜாமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின்... மேலும் பார்க்க